Tuesday, April 28, 2009

அன்புள்ள ரம்யா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அம்மாவின் அன்பு மாறாமல் இருக்கும்
அப்பாவின் நேசம் பிறழாமல் நிற்கும்
சகோதரிகளின் பாசம் வற்றாமல் நிலைக்கும்
துணைவரின் காதல் சிதறாமல் கிடைக்கும்

கௌதம் தரும் உவப்பும் மின்னலின் சிரிப்பும்
கண்களில் உற்சாகத்தை ஊட்டும்(kaattum)
நல்ல நண்பர்களின் நட்பு நலம்பெற வைக்கும்
உற்ற சுற்றத்தின் உறவு உவகை தரும்

வாழ்த்துக்களின் வலிமை வளமூட்டும்
வாழ்வதின் பொருள் வியப்பூட்டும்
சேவை உள்ளம் கொண்ட உந்தன் மலர்ச்சியே
தேவை எங்கள் அனைவருக்கும்

உந்தன் எண்ணத்தில் உறுதி கொண்டு
உள்ளம் பூரித்திட உயரிய வாழ்வு பெற்று
உன்னத லட்சியத்தினை குறைவின்றி
உலகில் நிச்சயமாய் நிறைவேற்றி

பிறந்த பயனை பிழையின்றி நடத்திட
பிறந்த நாளில் உளமார மனமார
உள்ளன்போடு வாழ்த்துகிறேன்
உன்னை/ வளமுடன் வாழ்க/


அன்புடன் லலிதா(அம்மா)

2 comments:

மர்ம வீரன் said...

Wow. புலியைப் பெற்றது பூனையாகுமா? :)

Sanjai Gandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்யா.. வாழ்க வளமுடன்.